கோதாபயவின் ராஜினாமா கடிதம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு! (குறித்த அறிவித்தல் இணைப்பு)
குறித்த ஊடக அறிவித்தலை கீழே காணலாம்.
கோத்தாபய சிங்கப்பூர் சென்ற விமானம்: படைத்தது வரலாற்று சாதனை!
கோதாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதாவது உலகில் அதிகமான நபர்களால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற சாதனையை படைத்துள்ளது.
விமானங்களின் கண்காணிப்பு தொடர்பான தகவல்களை வழங்கும் இணையத்தளமான Flightradar24.com என்ற தளத்தின் தகவல்களின்படி மாலைதீவின் மாலேயிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட சவுதி அரேபியாவுக்கு சொந்தமான Saudia SV- 788 என்ற விமானம் 12,200 ற்கும் அதிகமான பேரால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் உலகின் கவனத்தையே திருப்பியுள்ளது என்பதற்கு இந்த விடயம் நல்ல சான்று என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை கோதாபய ராஜபக்ச சென்ற விமானம் சிங்கப்பூர் நேரப்படி இரவு 7.17 க்கு தரையிறங்கியுள்ளது.
இதேவேளை கோதாபயவின் வருகை தொடர்பில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில்,
கோட்டாபய தனிப்பட்ட பயணமாகவே சிங்கப்பூர் வருகை தந்துள்ளார். அவர் எவ்வித அரசியல் தஞ்சமோ புகழிடமோ கோரவில்லை. அவ்வாறு அரசியல் புகழிடம் சிங்கப்பூரால் பொதுவாக வழங்கப்படுவதும் இல்லை. அவர் சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குவார் என தெரியவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 தோட்டாக்களுடன் ராணுவ வீரரின் துப்பாக்கியை காணவில்லை! இன்னும் மாலைதீவை விட்டு செல்லாத ஜனாதிபதி! இலங்கையில் தொடரும் பரபரப்பு!
நேற்றிரவு பத்தரமுல்ல பொல்துவ சந்திக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் ராணுவ வீரர் ஒருவரும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக போலீஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான போலீஸ் அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து நாரஹேண்பிட்ட போலீஸ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இதன் போது வெல்லவாய ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியானது 60 தோட்டாக்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் பறித்தெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்களின்படி, நேற்று பல்வேறு இடங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்த 79 ஆண்களும் 05 பெண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேலை சிங்கப்பூர் சென்றதும் ராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கோதாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக செய்திகள் வெளியானாலும் இன்னமும் அவர் மாலைதீவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபயவிற்கு பாதுகாப்பு வழங்கி அடைக்கலம் கொடுத்தமைக்கு மாலைதீவின் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை வன்மையாக கண்டித்துள்ளது.
மேலும் கோதாபையவை மாலை தீவில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு கோரி மாலைதீவில் உள்ள இலங்கையர்கள் அங்குள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். இதன் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்றைய தினம் மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மாலைதீவின் வேலானா சர்வதேச விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் செல்லும் இரு விமானங்களை நிராகரித்து அதில் செல்லாமல் அங்கேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் நாடு பூராகவும் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் நகருகிறது. சரியான முடிவுகள் எடுக்கப்பட்டு அமைதியான நிலைமை திரும்ப வேண்டும் என்பதே சகலரினதும் பிரார்த்தனையாகும்.
வர்த்தமானியும் வெளியானது! நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு! கடும் பரபரப்புக்கு மத்தியில் இலங்கை!
பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கோதாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தான் வெளிநாட்டில் இருப்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாலும் எனவே வெளிநாட்டில் இருக்கும் காலம் வரை தனது கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமிக்கிறேன் என அந்த விஷேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாலைதீவிற்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதாகவும் சிங்கப்பூரை சென்றடைந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இன்றைய தினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிக்கையில் இன்றைய தினத்திற்குள் ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கிடைக்காவிட்டால் தான் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு சமூகமளிக்க முன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது அவர்களும் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகும் படி கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்தனர் ஆனால் ரணில் விக்ரமசிங்க வரவில்லை. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்துள்ளதாகவும் அவர்கள் பாராளுமன்றத்தை சுற்றி வளைத்துள்ளதாகவும் எனவே பாராளுமன்றத்திற்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அனுமதி தருமாறு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அந்தக் கோரிக்கை கட்சி தலைவர்களினால் நிராகரிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இது மாத்திரமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நபர் ஒருவரை பிரதமராக பெயரிடுமாறு தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் வகையிலேயே இவ்வாறு பிரதமர் ஒருவரை பெயரிடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 9ம் தேதி கூட்டத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆளும் கட்சியை சேர்ந்தவரும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கருதப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கடந்த 9ம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்களின் அவசர கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும்.
இது மாத்திரமன்றி தற்போது புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் காணப்படும் பிரதமரின் காரியாலயம் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களால் விடுவிக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தாம் எப்போதும் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஆனால் அரச அலுவலகங்களை கைப்பற்றி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ரணில் விக்ரமசிங்க உடனடியாக ராஜினாமா செய்து சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் நிர்வாகத்தை சபாநாயகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கடந்த ஒன்பதாம் தேதி ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய செயல்பட வேண்டும் என அரசாங்கத்திலிருந்து அண்மையில் விலகி சுயாதீனமாக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
இது மாத்திரமன்றி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கையில் தற்போதைய நெருக்கடியான நிலைமைக்கு பாராளுமன்றத்தால் தீர்வு காண முடியும். எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாராளுமன்றத்தையோ சபாநாயகரின் இல்லத்தையோ முற்றுகையிடுவதை தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்திற்கு அண்மையிலும் போராட்டக்காரர்கள் கூடியமையால் அங்கு கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டு கடும் பதற்ற நிலை தோன்றியது.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு மாத்திரம் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு முழு நாட்டிற்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால் இந்த ஊரடங்கு உத்தரவுக்கான அதிவிசேட வர்த்தமானி சற்று நேரத்திற்கு முன் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஒவ்வொரு நிமிடமும் கடும் பரபரப்புக்கு மத்தியிலும் போராட்டங்களுக்கு மத்தியிலும் கழிகின்றது. நல்ல முடிவுகள் எட்டப்பட்டு சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரினதும் பிரார்த்தனையாகும்.
ஜனாதிபதி மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை! (விமானப்படையின் அறிக்கை இணைப்பு)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றமை தொடர்பில் இலங்கை விமானப்படை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு வெளியானது!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த ஒரு தீர்மானத்திற்கும் தான் உடன்படுவதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Annual Teacher Transfer - 2023 (Central Province) / வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2023 (மத்திய மாகாணம்)
08-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 08-07-2022
01-07-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 01-07-2022
புதிய வகையான முகக் கவசம் கண்டுபிடிப்பு!
இந்த முக கவசமானது கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அதை அழிக்கவும் செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட முகக் கவசத்தால் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அது அழிக்கப்படவில்லை.
இந்த புதிய முக கவசத்தை நீண்ட காலம் பாவிக்கலாம். மேலும் காற்றின் மூலம் பொதுவாக பரவக்கூடிய கிருமிகளில் இருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள N95 முகக் கவசத்தில் காணப்படும் வடிகட்டுவதற்காக உள்ள அடுக்குகள் இரசாயண செயற்பாடுகளால் பாதிப்படைய கூடியவை. ஆனால் இந்த முக கவசத்தின் அடுக்குகள் பாலிபுரப்பலின் நார்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அவை வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் செல் சுவரை பாதிப்படையச் செய்து அவற்றை அழிக்கவும் செய்கின்றது.
Short course in Professional web development using Joomla and WordPress
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்
04-07-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில், பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன.