திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை...

October 14, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 9ம் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிள் சேவையாற்றக்கூடிய ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்களை எதிர்வரும் 3 தினங்களுக்குள் புதுப்பித்து கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தேவை ஏற்படின் புலனாய்வு பிரிவிற்கு தகவல்களை வழங்குவதற்கு நிறுவன பிரதானிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • கொரோனா தொற்று காரணமாக மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று (12) மாலை 6.30 மணி அளவில் மீண்டும் குறித்த 2 கிராமங்கள் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் மன்னாரின் பல பாகங்களிலும் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 
  • ஹொரண வைத்தியசாலையில் மேலும் 5 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 வைத்தியர்களும் அடங்குவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறான சகல தகவல்களும் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஹொரண வைத்தியசாலையில் தாதி ஒருவருக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது. 41 பேர் முதல் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு பி.சி.ஆர் பரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஆகவே தற்போதைய நிலையில் ஹொரண வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று இல்லை´ என ஹொரண ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் அயந்தி ஜயவர்தன தெரிவிப்பு. 

  • மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்ததாக செய்தி வெளியானது. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக உயிரிழந்த, வெளிநாட்டில் பணியாற்றிய இலங்கை தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இழப்பீடுகளை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, உயிரிழந்த 14 பேர் சம்பந்தமான ஆவணங்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உயிரிழந்த 14 தொழிலாளர்களில் 12 பேர் ஆண்கள் என்பதோடு இருவர் பெண்களாவர். அவர்களில் ஒன்பது பேர் சவுதி அரேபியாவிலும், நான்கு பேர் குவைத்திலும், ஒருவர் டுபாயிலும் உயிரிழந்துள்ளனர். 
  • கடந்த ஜூலை மாதம் மாலைத்தீவில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து சுமார் 4 மாதங்கள் கடந்த நிலையில் நபரொருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கஹவத்தை வெல்லந்துர பிரதேசத்தை சேர்ந்த இவர் மீண்டும் மாலைத்தீவிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19க்கு மத்தியிலான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அரசாங்கத்தினால் பரிப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய உணவுகள் சிலவற்றுக்கான இறக்குமதித் தீர்வை வரி நீக்கப்பட்டது. 
  • இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது. அதன்படி, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5038 ஆக அதிகரிப்பு. இதேவேளை மினுவாங்கொடை கொரோனா கொத்தணி இன்றைய தினம் (13) மேலும் 145 ஆல் அதிகரிப்பு.
  • Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 13-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை

October 14, 2020

 


விண்ணப்ப முடிவு திகதி: 23-10-2020. 
முழு விபரங்களை கீழே காணலாம்.



Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை Vacancies: தெங்கு பயிர்ச்செய்கை சபை Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்:

October 14, 2020

இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற மாணவியொருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை ஆம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான பத்திரிகை செய்தியை இங்கு தருகிறோம்.


-thinakaran 13.10.2020.
பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்: பரீட்சைக்கு தோற்ற மாணவிக்கு அனுமதி மறுப்பு: விசாரணை ஆரம்பம்: Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

பிற்போடப்பட்ட பரீட்சைகள்

October 14, 2020

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் திட்டமிடப்பட்ட பரீட்சைகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிக்கு பின்னரே பரீட்சைகள் தொடர்பாக மீள அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்படும் பரீட்சைகள் 
ஒரு வார கால முன்னறிவித்தலே இணையதளத்தில் அறிவிக்கப்படும். 
ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு, மீள்பதிவு, மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: teachmore
பிற்போடப்பட்ட பரீட்சைகள் பிற்போடப்பட்ட பரீட்சைகள் Reviewed by irumbuthirai on October 14, 2020 Rating: 5

12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

October 13, 2020

12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 12-10-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை...

October 13, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 8ம் நாள் அதாவது திங்கட்கிழமை (12) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமானது. இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 362,824 மாணவர்கள்கள் தோற்றுகின்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக 12 மேலதிக மத்திய நிலையங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவிப்பு. 
  • ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை குறித்த பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் பானதுறை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாணவியும் இவரும் பல்கலைக்கழக விடுதியில் ஒரே அறையில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  • கந்தான, நாகொட பகுதியில் உள்ள இலங்கை மின்சார (தனியார்) நிறுவன ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி அதிகாரி ஒருவரின் மகள் பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலையில் கடமையாற்றியதாக தெரிவிப்பு. 
  • தொழில் திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் செய்து கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. விமலவீர தெரிவித்துள்ளார். தற்போதைய கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் காரணமாக சேவைகளைப் பெற கொழும்பின் நாரஹன்பிட்டியவில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டே தொழில் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் பொது சேவைகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் பரவலாக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து சேவைகளையும் பிராந்திய அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிப்பு. 

  • மன்னார் மாவட்டத்தில் நேற்று மூடப்பட்ட இரு கிராமங்களும் இன்று (12) மீண்டும் திறப்பு. 
  • சிலாபம் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக முதலாவது பிசிஆர் பரிசோதனையில் இனங்காணப்பட்ட போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிசிஆர் பரிசோதனைகளின் ஊடாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டதாக அறிவிப்பு. 
  • மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள ருகுணு பல்கலைகழக மாணவி ஒருவரின் தந்தை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த மாணவி மற்றும் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மற்றுமொரு மாணவி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  கடந்த 27 ஆம் திகதி குறித்த தந்தை மாணவியை பார்ப்பதற்காக விடுதிக்கு வருகை தந்ததாகவும் அவர் கந்தான பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிப்பு. 
  • ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. 
  • கொரோனா வைரஸ் (கொவிட் 19) அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு. 
  • தற்போதைய சூழலில் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒரு உலகளாவிய தொற்றுநோய். அதன் பரவல் இன்று அல்லது நாளை முடிவடையாது. இலங்கையில் மட்டும் இதனை கட்டுப்படுத்தி சுதந்திரமாக இருக்க முடியாது. எனவே, கொவிட் - 19 தொற்றுநோய் உலகத்தில் இருந்து ஒழிக்கப்படும் வரை நாம் கொவிட் 19 உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும். முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து சமூக செயற்பாட்டை இடைக்கிடையே நிறுத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியாது என பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 
  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை நாளை (13) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 
  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஶ்ரீலங்கன் சரக்கு பிரிவின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. 
  • தொம்பே, பூகொட பகுதியை சேர்ந்த ஆடை கைத்தொழிற்சாலை ஊழியரான பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
  • மினுவங்கொட கொவிட் கொத்தணியின் எண்ணிக்கை 1397 ஆக அதிகரித்தது. அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4844 ஆக அதிகரித்தது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 12-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்...

October 13, 2020

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் 18 பிரதேசங்களில் இன்று (13) தொடக்கம் 3 தினங்களுக்கு வர்த்தக நிலையங்களைத் திறப்பது மற்றும் மருந்தகங்களை திறப்பது தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 
கம்பஹா பொலிஸ் வலையத்திற்குள் 18 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்த பிரதேசங்களில் 
உணவுப் பொருள் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையில் திறந்திருப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. 
ஆனால் இந்த பிரதேசங்களில் மூன்று நாட்களுக்கு முழுமையாக பொது மக்கள் போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவதை வரையறுப்பதற்காக மீண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இன்று செவ்வாய், புதன் மற்றும் வியாழன் அகிய மூன்று தினங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறும். 
இதன் பின்னர் இது தொடர்பான நிலைமை குறித்து அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இந்த பிரதேசங்களின் ஊடாக வாகனங்கள் பயணிக்க முடியும். இருப்பினும் இந்த பிரதேசத்தில் பயணிகளை வாகனங்களில் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். உயர்தர பரீட்சை பரீட்சாத்திகளுக்கு இதனால் எந்தவித இடையூறும் ஏற்படாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்... இன்று முதல் மூடப்படும் வர்த்தக நிலையங்கள்... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

கொரோனா உறுதியான ஆசிரியை...

October 13, 2020

ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் சீதுவ, ஆண்டியம்பலம பிரதேச பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை. இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா உறுதியான ஆசிரியை... கொரோனா உறுதியான ஆசிரியை... Reviewed by irumbuthirai on October 13, 2020 Rating: 5

தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்

October 12, 2020

களுத்துறை, இலங்கை போலீஸ் கல்லூரியில் தனிமைப்படுத்தலில் இருந்த மினுவாங்கொடை போலீஸ் நிலையத்தில் போலீஸ் சாரதியாக கடமையாற்றிய நபர் கடந்த வெள்ளி இரவு தப்பிச் சென்றுள்ளார். 
பொலீஸ் கல்லூரி வளாகத்திலிருந்து களுத்துறைக்கு முற்சக்கர வண்டியில் சென்ற இவர் மதுபானம் அருந்தி களுத்துறை, கமகொட, ரஜவத்த பிரதேச வீடொன்றுக்கு அருகாமையில் விழுந்து கிடந்துள்ளார். 
இதைக் கண்ட வீட்டார் 
களுத்துறை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினார். அங்கு வந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதும் தான் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. 
பின்னர் இவரையும் இவரை அழைத்து வரச் சென்ற உப பொலிஸ் பரிசோதகர், போலீஸ் கான்ஸ்டபிள், சாரதி ஆகியோர் போலீஸ் கல்லூரிக்கே தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 
தகவல் வழங்கிய குறித்த வீட்டார் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 
அத்துடன் இவர் சென்ற முற்சக்கர வண்டி சாரதியை போலீசார் தேடுகின்றனர். 
இதேவேளை குறித்த போலீஸ் நபர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
நிவ்ஸ்வய.
தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார் தனிமைப்படுத்தலிலிருந்து தப்பிய போலீஸ் இன்னும் மூவரை அழைத்துச் சென்றார்  Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை...

October 12, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 7ம் நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது. நாடு பூராகவும் 2,936 மத்திய நிலையங்கள். 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றினர். சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள். இதற்கு மேலதிகமாக இம்முறை Covid-19 ற்கு சிகிச்சை அளிக்கப்படும் IDH வைத்தியசாலையிலும் 5 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். 
  • களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சுமார் 80 கடைகளுக்கு கொரோனா தொற்றாளர்கள் இருவர் சென்றுள்ளதாக நேற்றைய (10) தினம் இனங்காணப்பட்டதை அடுத்து பொருளாதார மத்திய நிலையம் கிருமி தொற்று நீக்கபட்டுள்ளது. பிரண்டிக்ஸ் கைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்த திவுலுபிட்டிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரும் அவருடைய லொறி ஓட்டுனரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்கள் இருவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டிருந்தது. குறித்த இருவரும் பழகிய தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தை சேர்ந்த 100 இற்கும் அதிகமானவர்களின் பிசிஆர் பரிசோதனைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

  • அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (11) நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவிப்பு. 
  • பொதுமக்களுக்கு தபால் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத் துறை வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் பரிந்துரைகளின் படி ஜனாதிபதி செயலகத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்கள் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக, பொதுமக்கள் வருகைத் தருவதன் ஊடாக ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் தபால் ஊடாகவும் தொலைபேசி ஊடாகவும் மக்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இவ்வாறு பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு - தொலைபேசி- 0114354550 / 0112354550 தொலைநகல்- 011 2348855 ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் - 0112338073 ஜனாதிபதி நிதியம் - 0112354354 (4800 / 4814 / 4815 / 4818) தொலைநகல்- 011 2331243 
  • வவுனியா, சிறீபாத மற்றும் மகரகம தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதற்காக ராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டது. 
  • மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய இரு கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட தாக ராணுவ தளபதி அறிவிப்பு. 
  • அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களின் மருந்துகளை அவர்களின் வீடுகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானம். அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து குறித்த மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களினுள் முதலில் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஶ்ரீதரன் மேலும் தெரிவிப்பு. 
  • கொவிட் தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு. எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும், அதன்படி தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப் படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார். குறித்த பிரதேசங்களில் முகக் கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 
  • இன்று (11) இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் புதிதாக மூன்று வைத்தியர்களும் அடங்குவர் என Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவிப்பு. மாவனல்லை பிரதேசத்தில் இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். இவர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியோடு (Cluster) தொடர்புபட்டவர்கள் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவிப்பு. ஏற்கனவே கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  • இன்றைய தினம் மொத்த தொற்றாளர்கள் 124 ஆகும். இதில் 121 பேர் மினுவாங்கொட தொழிற்சாலையோடு சம்பந்தப்பட்டவர்கள். 3 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 4750 ஆக அதிகரிப்பு.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 11-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன்

October 12, 2020

 


எல்பிட்டிய, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த கவீஷ சதுரங்க தனது அம்மா இறந்த விடையம் தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய சம்பவம் பதிவாகியுள்ளது. 
 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரது அம்மா பரீட்சைக்கு முந்தைய நாள் (10) மரணமாகியுள்ளார். இந்த விடயத்தை அயலவர்கள் உறவினர்கள் மறைத்து அயலவர் ஒருவரின் வீட்டில் இவரை தங்க வைத்துள்ளனர். 
பின்னர் அடுத்த நாள் மாணவரின் தந்தை பரீட்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பரீட்சை முடிந்து இந்த மாணவனை வகுப்பாசிரியை அழைத்து வந்தது மரணமான தாயைப் பார்ப்பதற்கே..
(அததெரண)
தாய் மரணமானது தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் தாய் மரணமானது  தெரியாமல் புலமைப்பரிசில் எழுதிய மாணவன் Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா...

October 12, 2020

நேற்றைய தினம் (11) இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் புதிதாக மூன்று வைத்தியர்களும் அடங்குவர் என Covid-19 தடுப்பு தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 
 மாவனல்லை பிரதேசத்தில் இருவரும் கேகாலை பிரதேசத்தில் ஒருவரும் அடங்குவர். 
இவர்கள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணியோடு (Cluster) தொடர்புபட்டவர்கள் எனவும் அந்த நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கம்பஹா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Source:Newswire)
மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா... மேலும் மூன்று வைத்தியர்களுக்கு கொரோனா... Reviewed by irumbuthirai on October 12, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை...

October 11, 2020

 


திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 6ம் நாள் அதாவது சனிக்கிழமை (10) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • ஊரடங்கு உத்தரவை மீறிய 97 பேர் இதுவரை கைது. 27 வாகனங்களும் பறிமுதல் செய்ததாக அறிவிப்பு. 
  • சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு. 
  • தற்போதைய கொவிட் தொற்று நிலமையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என இலங்கை முதலீட்டாளர்கள் சபை தெரிவிப்பு. 
  • நாளை (11) நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையை கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 மாணவர்கள் எழுதவுள்ளனர். இவர்கள் தாம் சிகிச்சை பெறும் IDH வைத்தியசாலையில் எழுதவுள்ளதாகவும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவிப்பு. அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ள உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சார்த்திகளுக்கு அந்த நிலையங்களிலேயே பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிப்பு. 

  • திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் மாகாணப் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவிப்பு. 
  • நாளைய தினம் (11) நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை என்பன நடைபெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்கள் சுகாதார பாதுகாப்புடன் உள்ளதாகவும் எனவே பரீட்சைகள் தொடர்பில் பெற்றோர்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவிப்பு. 
  • ஆயுர்வேத திணைக்களமும் ஆயுர்வேத மருந்தாக்கற் கூட்டுத்தாபனமும் இணைந்து கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும் இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெற இருப்பதாகவும் சுதேச வைத்திய துறை அமைச்சர் தெரிவிப்பு. 
  • கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அறிவிப்பு. 
  • பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து குறித்த அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவிப்பு. 
  • கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்று சிறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியசாலையின் மூன்று வார்டுகளும் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கம் ஒன்றும் மூடப்பட்டது. 
  • கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள Next ஆடை தொழிற்சாலையில் மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு பணிபுரியும் ஒரு ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஏனைய அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
  • கொரோனா காலத்தில் வெளிநாட்டிலுள்ள இலங்கையரை இலங்கைக்கு அழைத்து வருவதில் திட்டமிடப்பட்ட ஊழல்கள் நிகழ்ந்துள்ளமை அம்பலமாகியுள்ளது. இதில் அரச அதிகாரிகள் மற்றும் தூதரக மட்டத்திலான அதிகாரிகள் உட்பட பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக புலனாய்வு தகவல்களை ஜனாதிபதிக்கு சாட்சி சகிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தற்பொழுது இந்த பணி Covid-19 தேசிய செயற்பாட்டு மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
  • இன்று மாத்திரம் 105 பேருக்கு கொவிட்- 19 தொற்றுறுதியானது. மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையின் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய மேலும் 101 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 628 ஆக அதிகரித்தது.
Irumbuthirainews.
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 10-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on October 11, 2020 Rating: 5
Powered by Blogger.